Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தூர் திருபுராய்க்கல் பகவதி ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கண்ணாடி பல்லக்கில் சுவாமி உலா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் விழாவிற்கு ஆயக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் விழாவிற்கு ஆயக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
04:04

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு தேருக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை நடைபெற்றது.


கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும், ஆசியாவில் மூன்றாவது தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர் விழா தொடங்குகிறது. அதனை முன்னிட்டு இன்று தேர் அலங்காரப் பணிக்காக ஆயக்கால் முகூர்த்த பூஜை பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றுக்கு நடைபெற்றது. இதனையடுத்து, பாளைக்குச்சி தேரில் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 


இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் கூறும் போது; சித்திரைத் தேர் திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சியும், 2ம் தேதி மாலை சூரிய சந்திர மண்டல காட்சி, 3ம் தேதி அதிகார நந்தி, கிளி,பூதம்,அன்னபட்சி வாகன காட்சிகள், 4ம் தேதி கைலாச வாகனம் புஷ்ப பல்லாக்கு ஆகியவை நடைபெறுகிறது. 5ம் தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தல் மற்றும் புறப்பாடு, 6ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம்,யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறுகிறது. மே 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல், 8ம் தேதி காலை பெரிய தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 9ம் தேதி திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ம் தேதி காலை அம்மன் தேர்,சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்,கரி வரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்கள் வடம் பிடித்தல் மற்றும் மாலையில் வண்டித்தாரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம்,13ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், 14ம் தேதி மஞ்சள் நீர் மயில் வாகன காட்சியுடன் தேர் திருவிழா நிறைவுபெறுகிறது. தேரை முதலில் ஏர் கம்ப்ரசர் கொண்டு வாகன போக்குவரத்தால் ஒட்டி இருக்கும் மண், தூசுகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கும். பக்தர்களுக்கான அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை வசதிகளும் நிறைவாக விழாவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். தேர் ஆயக்கால் முகூர்த்த பூஜையில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கவிதா மணி மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar