நல்லுார் அய்யனார் கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2025 10:05
திருபுவனை; மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தில் உள்ள விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், கலியுகபெருமாள், காளிகாதேவி, பூரணி புஷ்கலா சமேத அய்யனாரப்பன் மற்றும் பரிவார ஆலய 8ம் ஆண்டு திருவிழா நேற்று காலை தொடங்கியது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தில் கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தில் சாகை விழா நடந்தது. ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில் இரண்டாம் நாளான இன்று மாலை 6:00 மணிக்கு கலியுகப் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 7:00 மணிக்கு நல்லுார் ஏரிக்கரையில் உள்ள காளிகாதேவி ஆலயத்தில் இருந்து கரகம் ஜோடித்து வீதியுலா நடக்கிறது. இரவு 7;00 மணிக்கு வலம்புரி செல்வ விநாயகர், காளிகாதேவி சுவாமிகளின் வீதியலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.