கோவை; சாய்பாபா காலனி கே. கே .புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் பஞ்சமி வழிபாடு நடைபெற்றது.
வைகாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே .புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.