திருப்புல்லாணி பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம்; முருகனுக்கு 11 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2025 03:06
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி சிலையப்பன் வலசையில் உள்ள பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜூன் 7 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 10:30 மணிக்கு பாலமுருகன் கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் பாலமுருகனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிலையப்பன் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.