பூதக்காளி அம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை; பக்தர்கள் தீச்சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2025 11:06
வானுார்; ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்பாள் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு கிராமத்தில் உள்ள சுயம்பு பூத காளி அம்பாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி தீச்சட்டி எடுத்தல் விழா நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் வானுார் ஒன்றிய சேர்மன் சிவா செய்திருந்தார்.