விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் கடந்த 19ம் கொடியேற்றம் நடந்தது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இ வு கிளி, பூதம், யானை வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, இன்று அதிகாலை ஆழத்து விநாயகர், அம்பாள், சண்முக சுப்ரமணியர், சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். வரும் 27ம் தேதி தேரோட்டம், 28ம் தேதி காலை அன்னபட்சி வாகனத்தில் தீர்த்தவாரி, இரவு ஸ்படிக பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, 29ம் தேதி காலை 4:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.