வில்லியனுார்; கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. வில்லியனுார், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினசரி காலையில் சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழா கடந்த 27ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது. 28ம் தேதி சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, நேற்று புதுச்சேரி மாநில அனைத்து மீனவர் குல மரப்பினர்கள் சார்பில், தெப்ப உற்சவம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா, சாய்சரவணன் குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை விழாக்குழு தலைவர் இளங்கோ வரவேற்றார். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.