பதிவு செய்த நாள்
21
டிச
2012
10:12
சுரண்டை: சுரண்டை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிவிழா வருமு 24ம் தேதி நடக்கிறது.சுரண்டையில் பாவூர்சத்திரம் ரோட்டில் சீனிவாசபெருமாள் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு தினமும் காலை, மாலையும் விசேஷ நாட்களில் முழுநேரபூஜையும் நடந்து வருகிறது. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழா வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6மணிக்கு சீனிவாசபெருமாள் அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மாலையில் சொற்பொழிவும், ஐயப்ப பஜனையும் நடக்கிறது. தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.அண்ணாமலை, செல்வமோகன்தாஸ்பாண்டியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்.செல்லையா, ஜெயலட்சுமி, கோதண்டராமராவ், அனிதாராவ், டாக்டர்கள் விஜயன் அருனகிரி, முருகையா, முத்துலட்சுமி, கோதை மாரியப்பன், ராமலட்சுமி உட்பட சுரண்டை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்.செல்லையா தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துபாண்டியன், அர்ச்சகர் சீனிவாசஅய்யங்கார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தகவலை அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துபாண்டியன் தெரிவித்தார்.