பதிவு செய்த நாள்
26
டிச
2012
11:12
கரூர்: பசுபதீஸ்வர ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சீதா கல்யாண உற்வச விழா வெகு சிறப்பாக துவங்கியது. கரூரில் ஆண்டுதோறும், மார்கழி மாதம் சீதா கல்யாண உற்சவ விழா நடந்து வருகிறது. 12வது உற்சவ விழா கடந்த, 24ம் தேதி காலை, 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 மணிக்கு அன்னபூரணி மஹாலட்சுமி ஹோமம் நடந்தது. மாலை, 6 மணிக்கு பசுபதி ஐயப்பா ஸ்வாமி புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் மஹா சண்டி ஹோமங்கள் நடந்தது. மாலை நடந்த குத்து விளக்கு பூஜையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இன்று காலை, 6 மணிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வருதல், 9 மணிக்கு ஐயப்பசாமிக்கு அபிஷேகம், 9.30 மணிக்கு ஏக தின லட்சார்ச்சனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு திருவண்ணாமலை எழில் அரசியின், பாட்டு கலந்த பட்டி மன்றம் நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 8 மணிக்கு கணபதி பூஜையும், இரவு, 8 மணிக்கு பஞ்சபதி பூஜையும், 6ம் தேதி காலை, 9 மணிக்கு சீதா கல்யாண உற்வசமும், 10ம் தேதி காலை, 7 மணிக்கு ஹனுமந்த் ஜெயந்தி உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்க டிரஸ்ட் தலைவர் குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.