Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்: ... குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் சிறுவர்களின் சித்திரை திருவிழா, பொதுமக்கள் ஆச்சர்யம்
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் சிறுவர்களின் சித்திரை திருவிழா, பொதுமக்கள் ஆச்சர்யம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2026
03:04

திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .

தென் மாவட்ட மக்களின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா நேற்று மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது . மதுரை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு மதுரையில் சகோதரி திருமணத்தை காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தொன்று தொட்டு நடந்து வருகிறது. இந்தாண்டு மே 1ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார். அழகர்கோயிலில் இருந்து சீர்பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழகரை சுமந்து வருவார்கள், இதற்காக விரதம் இருந்து அழகரை தூக்கி வருவது வழக்கம், இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் திருப்புவனத்திலும் வசிக்கின்றனர். வருடம் தோறும் அழகரை சுமக்க இவர்கள் செல்வர்கள். இவர்கள் முன்கூட்டியே திருப்புவனத்தில் சித்திரை திருவிழா கொண்டாடியே பின்னரே அழகரை சுமக்க செல்வார்கள்.

இவர்களை பார்த்து திருப்புவனம் பகுதி சிறுவர்களும் தங்கள் சேமிப்பில் இருந்து சித்திரை திருவிழா கொண்டாடுகின்றனர். இதற்காக தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருவது, வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பது, பின் வைகை ஆற்றில் எழுந்தருள்வது என அனைத்து நிகழ்வுகளையும் வரிசை மாறாமல் செய்கின்றனர். நேற்று காலை அழகரை சுமந்து நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக சென்று வைகை ஆற்றில் இறங்கினர் .

பொதுமக்கள் கூறுகையில்: கோடை விடுமுறையில் செல்போன், இண்டெர் நெட், இன்ஸ்டாகிராம், முக நூல் உள்ளிட்டவற்றால் இளையதலைமுறையினர் வசம் திருவிழாக்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள் குறைந்து விட்டாலும் சித்திரை திருவிழா மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் அழகரை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும், திருப்புவனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தில் இருந்து சித்திரை திருவிழாவை நடத்தி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar