உத்தரகோசமங்கையில் புராணங்களின் தொகுப்பு பலகையாக நிறுவல்; பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2025 04:10
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் பெற்ற சிவாலயம் ஆகும்.
கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஏப்., 4ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பிறகு அதிகளவு விடுமுறை தினங்களில் பக்தர்கள் உத்தரகோசமங்கைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கோயிலின் நுழைவுப் பகுதியில் உத்தரகோசமங்கையின் சிறப்பு மற்றும் தல வரலாறு பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதி வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். அதேபோன்று இலந்தை மரம் அருகே மாணிக்கவாசகப் பெருமானின் வரலாறு மற்றும் அவர் பாடிய பாடல் இடம் பெற்ற ஸ்தலங்கள் குறித்து விரிவாக ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் எழுதி வைத்துள்ளனர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரக்கூடிய பக்தர்கள் நிதானமாக கோயிலின் தல வரலாறு மற்றும் மாணிக்கவாசகரின் வரலாறு உள்ளிட்டவைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்கின்றனர்.