அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2025 10:10
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் பெருமாள் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் சுவாமி ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.