Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை மதுரை மீனாட்சி அம்மனுக்கு ...  பாலமலை ரங்கநாதர் கோவிலில் 1008 கலச பூஜை பாலமலை ரங்கநாதர் கோவிலில் 1008 கலச பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக திருச்சூர் பிரசாத் தேர்வு
எழுத்தின் அளவு:
 சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக திருச்சூர் பிரசாத் தேர்வு

பதிவு செய்த நாள்

19 அக்
2025
09:10

பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, கார்த்திகை மாதம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு வருவர். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நெருங்கும் நிலையில், அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி தேர்வு நடந்தது. நேற்று முன்தினம் துலாம் மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று காலை உஷ பூஜை முடிந்து மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் நடந்தது. சபரிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் முன்னிலையில் பந்தள அரச வம்சத்தை சேர்ந்த இரு குழந்தைகள் குலுக்கல் சீட்டு வாயிலாக புதிய மேல்சாந்தியை தேர்வு செய்தனர்.

இதில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓராண்டு இந்த பொறுப்பை வகிப்பார். இவர் தற்போது ஆரேஸ்வரம் தர்மசாஸ்தா கோவில் பூசாரியாக உள்ளார். இதை தொடர்ந்து, மாளிகாபுரம் கோவில் மேல் சாந்தியாக கொல்லம் மாவட்டம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். அய்யப் பன் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப் பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. வி ரைவில் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன்,’’ என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar