ஸ்ரீரங்கம் பகல் பத்து நான்காம் நாள்; மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து நம்பெருமாள் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2025 10:12
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று நம்பெருமாள் மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து பக்தர்களுக்கு காட்சியாளி்ததார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா வருடம் தோறும் 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முதல் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதற்கு அடுத்து பகல் பத்து உற்சவம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,
திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 4-ம் நாளான இன்று காலை நம்பெருமாள் நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் - பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி, அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி, மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைரஅபய ஹஸ்தம் சாற்றி, திருமார்பில் - பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்; மகரி ; கஜலட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்; தங்க பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; மரகத கிளி பெரிய ஹாரம் மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து பின் சேவையாக - சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாத்தித்தார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டு வருகின்றனர்.