Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோயிலில் ... கோடி, கோடியாக வருமானம் வரும் தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதி இல்லை; பக்தர்கள் அவதி கோடி, கோடியாக வருமானம் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய பாதையில் பழநி பாதயாத்திரை: கண்மாய் கரைகளில் நடந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பாரம்பரிய பாதையில் பழநி பாதயாத்திரை: கண்மாய் கரைகளில் நடந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 ஜன
2026
12:01

திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பழநி பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாரம்பரிய பாதையான வயல் வரப்பு, கண்மாய் கரைகளில் நடந்து சென்றனர்.


சிவகங்கை மாவட்டத்தின் ஆன்மீக பாரம்பரியங்களில் பழநி பாதயாத்திரையும் ஒன்று. சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக முருக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கார்த்திகை 1 ல் விரதம் துவங்கி, தைப்பூசத்தன்று பழநி சென்று முருகனை வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் முதல் திருப்புத்தூர் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரோடுகளில் குடும்பம், குடும்பமாக பழநி நோக்கி நடந்து சென்றனர். வழியெங்கும் பக்தர்களை உறவினர்கள், பொதுமக்கள் உணவு,குடிநீர்,இளநீர் வழங்கி உபசரித்து ஆசி பெற்றனர்.


நேற்று மாலை வரை பக்தர்கள் திருப்புத்தூரை கடந்து சென்றனர். லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வதால் சிவகங்கை மாவட்ட கிராமங்கள் ‛ வெறிச்’ ஆகி விட்டன. இதில் ரோடுகளில் மட்டுமின்றி பாரம்பரிய பாதையில் யாத்திரை செல்வதை நகரத்தார் பாரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர்.பாரம்பரிய பாதையாக தேவகோட்டை,காரைக்குடி பகுதியிலிருந்து புறப்பட்டு குன்றக்குடி வந்து அங்கிருந்து வைரவன்பட்டி, கண்டவராயன்பட்டி,மருதிப்பட்டி,சிங்கம்புணரி,மணப்பச்சேரி,சமுத்திராப்பட்டி, நத்தம்,உப்பார்,இடைச்சிமடம்,திண்டுக்கல்,ரெட்டியாரபட்டி,செம்மடைப்பட்டி,குழந்தைவேலன் சன்னதி,சத்திரப்பட்டி, ஆயக்குடி,இடும்பன்குளம்,பழநி செல்கின்றனர். இவர்கள் ரோட்டில் மட்டும் செல்லாமல் பாரம்பரியமான பாதையாக கிராமங்களுக்கு குறுக்கே வயல் வரப்பு, கண்மாய் கரை, ஆற்றங்கரை வழியாகவும் நடந்து செல்கின்றனர். திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டியிலிருந்து வயல் வரப்பு,கண்மாய்கரை வழியாக சிறுகூடல்பட்டி வழியாக கண்டவராயன்ப்டடிக்கு சென்றனர். அதில் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் சென்றனர். நகரத்தார் மட்டுமி்ன்றி பலரும் அவர்களைப் பின்பற்றி பாரம்பரிய பாதையில் யாத்திரை சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar