Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி தைப்பூச விழாவில் பாதயாத்திரை ... பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; குவிந்த பக்தர்கள் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா; மயான பூஜையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆனைமலை மசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா; மயான பூஜையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
11:02

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது. நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகர், மயான அருளாளி அருண், உட்பட பல அருளாளிகள் அம்மனின் சூலம் மற்றும் பூஜை பொருட்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரைக்கு சென்றனர். மயான பூஜை நடந்த இடத்தில், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில், நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்து வந்தார். நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் உருவத்தை மறைத்து வைத்திருந்த திரை விலக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், அருளாளி எடுத்து வந்த அம்மனின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறகு பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அதிகாலை, 3:15 மணிக்கு அருளாளிக்கு அருள் வந்து அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத்துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். ஆடிக்கொண்டே அம்மன் உருவத்தை சிதைத்தார். அம்மன் உருவம் சிதைக்கும் போது, அம்மனின் பட்டு சேலையில் பிடிமண் எடுக்கப்பட்டது. அம்மனின் உருவம் சிதைக்கப்பட்ட பின், மயான பூஜை முடிந்தது. இந்நிகழ்வில், ஆனைமலை மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் அருள் வந்து, ஆடினர். பக்தர்கள்,‘ அம்மா தாயே... மாசாணி தாயே...’ என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். பக்தர்கள் கூட்டத்தை போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் கழுத்துப்பகுதியிலிருந்த மண் எடுக்கப்பட்டு, சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு மகா பூஜையும் நடந்தது. இன்று காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவை தொடர்ந்து, நாளை (3ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar