முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே வளநாடு ஊராட்சி கர்ப்பபிள்ளை மடத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 70 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. ஜன.30ல் மங்கள இசை,அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம் துவங்கி முதல் கால,இரண்டாம் கால,மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபாரதனைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கோ பூஜை, லெட்சுமி பூஜை மகாபூர்ணாஹீதி தீபாரதனை முடிந்து கடம் புறப்பட்டு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம்,விபூதி உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.விழாவின் போது 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.