விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி சிவ, விஷ்ணு கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சத்ய நாராயண பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் விஷ்ணு சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உற்சவர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதையடுத்து, சத்யநாராயண பூஜை நடந்தது. பூஜையின்போது சத்ய நாராயண கதைகள் படிக்கப்பட்டன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.