Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசித்திருவிழா பூத்தேரில் ... பாதாள செம்பு முருகன் கோயிலில் கிரிக்கெட் அணி வீரர்கள் தரிசனம் பாதாள செம்பு முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராத்திரிக்காக திருப்புவனத்தில் நேர்த்தி கடன் அரிவாள் தயாரிப்பு
எழுத்தின் அளவு:
சிவராத்திரிக்காக திருப்புவனத்தில் நேர்த்தி கடன் அரிவாள் தயாரிப்பு

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
12:02

திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி பட்டறைகளில் நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.


நாடு முழுவதும் சிவராத்திரி அன்று குலதெய்வ கோயில்களுக்கு பக்தர்கள் பலரும் நேர்த்தி கடனாக அரிவாள் செலுத்துவது வழக்கம். திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி பட்டறைகளில் நேர்த்தி கடன் அரிவாள் தயாரிப்பு பணி அதிகரித்துள்ளது. இரண்டு அடியில் இருந்து 25 அடி உயரம் வரை அரிவாள் தயாரிக்கின்றனர்.


சிறிய அரிவாள் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் ஐந்து வரை தயாரிக்கின்றனர். 10 அடி முதல் 25 அடி உயரம் வரையிலான ராட்சத அரிவாள் பத்து முதல் 15 நாட்கள் வரை தயாரிப்பு பணி நீள்கிறது.தற்போது ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் சிறிய ரக அரிவாள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. சீசனை பொருத்து ஒவ்வொரு பட்டறைகளிலும் 50 முதல் 100 அரிவாள்கள் வரை விற்பனையாகும், நேர்த்தி கடன் அரிவாள் தவிர சூலம், திரிசூலம் உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்படுகின்றன.


அரிவாள் தயாரிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், விவசாய கருவிகள் தயாரிப்பு பெருமளவு குறைந்து விட்டது. சிவராத்திரி என்பதால் நேர்த்திகடன் அரிவாள் தயாரித்து வருகிறோம்,கடந்தாண்டை விட இந்தாண்டு இரும்பு விலை அதிகரித்துள்ளது. ஆனால் நேர்த்தி கடன் அரிவாள் என்பதால் அதே விலையில் தயாரித்து வருகிறோம், இரண்டு அடி முதல் 25 அடி உயரம் வரை தயாரிக்கின்றோம், ஒரு அடி தயாரிக்க மூவாயிரம் ரூபாய் வரை ஆகும், 25 அடி உயர அரிவாள் ஒரு வாரத்தில் இரண்டு பேர் சேர்ந்து தயாரிப்போம், என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar