Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடுங்கலுார் பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதலமடைந்த சோழர் கால பழையாறை சோமநாதர் கோவில் ராஜகோபுரம் புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:
சிதலமடைந்த சோழர் கால பழையாறை சோமநாதர் கோவில் ராஜகோபுரம் புதுப்பிப்பு

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
11:02

தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த நிலையில், ரூ.7.95 கோடி மதிப்பீட்டில் ஏழு அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரமாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பழையாறை, சோழ மன்னர்களும் அவர்களது குடும்பத்தினரும் வாழ்ந்த இடமாக இருந்ததால், மிகுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாக விளங்கி வருகிறது. இங்கு சோழர்களின் அரண்மனை மற்றும் கோவில்கள் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. சோழர்கள் காலக் கட்டுமானப் பாணியில் அமைந்த சோமகமலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் இங்கு உள்ளது. இக்கோவில் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. சோழர் காலத்து சிற்பக் கலையின் எடுத்துக்காட்டாக, இக்கோவிலின் வாயில் சுவர்களிலும் அவற்றில் உள்ள சிற்ப வடிவங்களிலும் காண முடிகிறது. நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்த கிழக்கு நோக்கி அமைந்த ராஜகோபுரம், பொதுவாக ‘மொட்டை கோபுரம்’ என அழைக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், கோவில் கோபுரத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் திட்டமிடப்பட்டன. கடந்த ஜனவரி மாதம், தேசிய தொழில்நுட்பக் கழகம் மூலம் கோபுரத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், ரூ.7.95 கோடி மதிப்பீட்டில் கோபுரத்தை ஏழு அடுக்குகளுடன் ராஜகோபுரமாக மாற்றும் கட்டுமானப் பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டன. இக்கட்டுமானத்திற்கான நிதியை கோவையைச் சேர்ந்த கற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வசந்தகுமார் உபயமாக வழங்கியுள்ளார். 


இதுகுறித்து துணை ஆணையர் உமாதேவி கூறியதாவது: இந்த கோவில் கி.பி. 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு மகாமகத்தின் போது கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது மொட்டை கோபுரம் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது, மொட்டை கோபுரத்தை முழுமையாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மண் தன்மை மற்றும் கட்டுமான அமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து நிலை கோபுரம் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பரந்த அடித்தளம் இருப்பதால், ஏழு நிலைகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அடித்தளத்தை வலுப்படுத்த சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு ஆண்டிற்குள் கோபுர கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.பல்லடத்தை அடுத்த, ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம் நடந்தது.அறுபத்து மூன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar