திருப்பூர்: முதலிபாளையத்தில் உள்ள, ஸ்ரீகொடுங்கலுார் பகவதி அம்மன் கோவிலில், செல்வகணபதி, பாலதண்டாயுதபாணி, சமயுபுரம் மாரியம்மன், கருப்பண்ண சுவாமி சன்னதிகள் உள்ளன. கோவிலில், 12ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றமும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை; பாலாஜி நகர் விநாயகர் கோவிலில் இருந்து, அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து, கோவிலில் அன்னதானமும் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, கொடுங்கலுார் பகவதி அம்மன் சாமி அருள் ஆட்டத்துடன், கதை படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.