ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2026 11:03
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமையொட்டி சுப்ரமணிய சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமிக்கு மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு, எழுத்தர் விமல்ராஜ் ஆகியோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.