Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வானுார் வர்ணமுத்து மாரியம்மன் ... வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் தற்காலிக தடை வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதார்நாத் கோவில் வருமானம் ரூ.71.06 கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
 கேதார்நாத் கோவில் வருமானம் ரூ.71.06 கோடியாக அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

13 மே
2026
11:05

டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவில் வருமானம் கடந்த 2024 – -25ல் 71.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34.32 சதவீதம் அதிகம்.


உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு யாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த யாத்திரை அக் ஷய திருதியை நாளான ஏப்ரல் 19ல் துவங்கியது. இந்நிலையில் கேதார்நாத் கோவிலில் நன்கொடை மற்றும் காணிக்கையாக கிடைக்கும் வருமானம் எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அமித் குப்தா என்ற தன்னார்வலர் கேட்டிருந்தார். இது தொடர்பாக இந்த கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் குழு அளித்த தகவல்: கேதார்நாத் கோவிலில் 2023 – -24 நிதியாண்டில் 52.90 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது, 2024 – -25 நிதியாண்டில் 34.32 சதவீதம் அதிகரித்து 71.06 கோடி ரூபாயானது. கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் 47 கோவில்கள் கோவில் குழு பராமரிப்பில் உள்ளது. இவற்றில், 700 பேர் வரை தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது. கோவில் சார்பில் 7 பள்ளிகள் மற்றும் 27 விருந்தினர் மாளிகைகள் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றின் பராமரிப்புக்கு கோவில் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஹெலிகாப்டரில் சென்று 21,000 பக்தர்கள் தரிசனம்; கேதார்நாத் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு தரிசனம் செய்ய செல்லும் சார்தாம் யாதிரை இந்த ஆண்டு கடந்த ஏப்., 22ல் துவங்கி நடக்கிறது. இதில் 21,000 யாத்ரிகர்கள் ஹெலிகாப்டரில் சென்று தரிசனம் செய்துள்ளதாக உத்தரகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர பஸ், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்து, பாட்டா குப்தகாசி மற்றும் சிர்சியில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் 17,976 யாத்ரிகர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இது தவிர வாடகை விமானங்கள் மூலம் 3,974 பேர் சென்று தரிசனம் செய்துள்ளனனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் திருநாள் விழாவில் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதம் மகாவிஷ்ணுவிற்கு உகந்த மிக முக்கிய விரதமாகும். அபரா ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை ... மேலும்
 
temple news
பொங்கலூர்: பொங்கலூர் சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஏப்ரல் 28 ல் பூ பொரி சாட்டுதல் ... மேலும்
 
temple news
கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 21 ... மேலும்
 
temple news
அன்னூர்: பச்சாகவுண்டனூரில், மழை வேண்டி, 108 தீர்த்தக் குட அபிஷேகம் நடந்தது. அக்கரை செங்கப்பள்ளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar