சிதம்பரம் ஆத்மநாதர் கோவிலில் குரு நமச்சிவாயர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2026 05:05
சிதம்பரம்: ஆத்மநாதர் கோவிலில், குரு நமச்சிவாயர் குருபூஜை மற்றும் மாணிக்கவாசகர் மாத குருபூஜை விழா நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் வேங்கான் தெருவில், திருபாற்கடல் மடத்தில் ஆத்மநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, குரு நமச்சிவாயர் கோவிலில், இன்று காலை சிவபூஜை வழிபாடுபு, சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றன. மேலும், குரு நமச்சிவாயர், மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனைகள் நடந்தன. இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர்.