Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த வேண்டும்: அகில பாரத இந்து மகாசபா நுாதன மனு
எழுத்தின் அளவு:
மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த வேண்டும்: அகில பாரத இந்து மகாசபா நுாதன மனு

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2026
05:07

தஞ்சாவூர்; அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என அகில பாரத இந்து மகாசபா சார்பில், அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று நுாதன முறையில் மனு அளித்தனர். 


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா பொதுச்செயலாளர் ராமநிரஞ்சன் தலைமையில், அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தின் எதிரே, தலையில் துண்டு போட்டுக் கொண்டும், நெல்மணிகளை கையில் ஏந்தியவாறு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மழை வேண்டி, அறநிலையத்துறை கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என மனு அளித்தனர். 


இது குறித்து ராமநிரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையால், மழை வேண்டுதல் வழிபாட்டு நடத்தப்பட்டது. அதில், அனைத்து  சிவன் கோவில்களில், நந்தியம் பெருமானை சுற்றி நீர் தொட்டி அமைத்து, கூட்டுப் பிரார்த்தனை நடத்த வேண்டும். நந்திகேஸ்வரர் மீது மிளகு அரைத்து சாற்றுதல், லிங்கத்தின் மேல் தாராபாத்திரம் அமைத்து, 24 மணி நேரமும் நீர் சொட்டும் வகையில் வழிபாடு, திருஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறையில் இடம்பெற்ற மழை பதிகத்தை பாடி கூட்டுப் பிரார்த்தனை,  அனைத்து சிவாலயங்களிலும் உள்ள திருக்குளங்களில் வேதபண்டிதர்கள் வருண ஜபம் நடத்த வேண்டும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதே இயற்கை வளம், நீர்வளம் மற்றும் விவசாய வளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு முயற்சியாகும். இந்து சமய அறநிலையத்துறை, உரிய சுற்றறிக்கை பிறப்பித்து செயல்படுத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு செயல்படுத்தி, மழை மற்றும் வறட்சி நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜகார்த்தா; இந்தோனேசியா, யோக்யகர்த்தாவில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் கோவிலுக்கான பாதுகாப்பு ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு; ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் ஸ்ரீ நெலத ஆஞ்சநேயா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹனுமனுக்கு ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், 180 கல்லூரி மாணவிகள், கல்வி மற்றும் அனுபவ பயணம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கடந்த பசலி ஆண்டு கோயில் வரவு ரூ.103.24 கோடியாக அதிகரித்துள்ளது என கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar