ஆடி வெள்ளி; வேப்பிலை அலங்காரத்தில் சந்தைகடை மாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2026 12:07
கூடலூர்: மேல்கூடலூர் சந்தைகடை மாரியம்மன் கோவில் மாரியம்மன் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வேப்பிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் அதிகளவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். மசினகுடி மசினி அம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளி மீட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும் என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.