Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆடி பஞ்சமி; வராஹியை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பூருக்கு 20ம் தேதி விஜயம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பூருக்கு 20ம் தேதி விஜயம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2026
11:07

திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி திருப்பூர் வருகிறார். வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.


சுவாமிகள், கேரளாவில் விஜயம் மேற்கொண்டுள்ளார். வரும், 20ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, பாலக்காட்டில் இருந்து திருப்பூர் வருகிறார். திருப்பூர் பல்லடம் ரோடு, ெஷரீப் காலனி, வாய்க்கால் தோட்டம், 24 மனை தெலுங்கு செட்டியார் கல்யாண மண்டப அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள, ஸ்ரீ காஞ்சி காமாட்சி கோவிலுக்கு வருகிறார். தங்க கோபுர காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, இரவு 8:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். வரும், 21ம் தேதி காலை, 8:30 மணிக்கு மீண்டும் தரிசனம் தருகிறார் காலை 9.30 மணி முதல் 12:00 மணி வரை வேத பாராயணம் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு திருப்பூர் தொழில் துறையினருக்கு அருளாசி வழங்குகிறார். வரும், 22ம் தேதி காலை, 8:00 மணி முதல், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகையை ஒட்டி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். முன்னதாக, திருப்பூர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளை மடத்துக்கு வந்தும், அருளாசி வழங்க இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் கல்யாண மண்டப அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும்,ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் திருப்பூர் கிளை – ராமகிருஷ்ண பஜனை மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 55 யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு திருவிழா விமரிசையாக ... மேலும்
 
temple news
திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar