Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் ... ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குங்குமவல்லி அம்மனுக்கு பிப்.,1ல் வளைகாப்பு திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
11:01

திருச்சி: உறையூர் தான்தோன்றீஸ்வரர் சமேத குங்குமவல்லி நாயகி அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா, நாளை மறுநாள் துவங்குகிறது. நாகக்கன்னியான காந்திமதி என்பவர், சிவபக்தியில் சிறந்து விளங்கினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காந்திமதி, ஒருமுறை நந்தவனம் வழியாக நடந்து சென்றபோது, வெயில் காரணமாக உடல் சோர்வுற்று ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார். "இறைவா, இன்று உன்னை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்று கண்ணீர் விட்டு கதறினார். அவரின் பக்திக்கு இரங்கிய சிவப்பெருமான், ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். "மகப்பேறு காலம் வரை என்னை இங்கேயே தரிசிக்கலாம் என்று வரமளித்தார். காந்திமதிக்கு சிவப்பெருமான் வரமளித்த ஸ்தலமாக, உறையூர் சாலைரோடு தான்தோன்றீஸ்வரர் கோவில் விளங்குகிறது. காந்திமதி அம்மையின் நினைவாக, ஆண்டுதோறும், தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, வளைகாப்பு திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நாளை மறுநாள் (1ம் தேதி), 63வது வளைகாப்பு திருவிழா சிறப்பாக துவங்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு செய்யப்படும், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும், தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லி நாயகி தாயாருக்கு செய்யப்படும். பொன் காப்பு, வெள்ளிக்காப்பு, வேப்பிலைக்காப்பு என்னும், 5 விதமான சித்தாரன்னங்கள் நைவேத்யம் செய்தும், லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அம்மனுக்கு சாற்றப்படும். முதல்நாள் கர்ப்பிணிக்கு: ஒன்றாம் தேதி முதல், 3ம் தேதி வரை, தொடர்ந்து வளைகாப்பு திருவிழா நடக்கிறது. முதல்நாள் காலை, 7.30 மணிக்கு, கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் பெற, ஹோம பூஜையும், மதியம், 1 மணிக்கு, வளைகாப்பு சம்பிரதாய பூஜையும், 2 மணிக்கு, தீபராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு, 48 நாட்கள் பூஜிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்மன் படம் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை பாக்கியம்: 2ம் தேதி காலை, 7 மணிக்கு, குழந்தை பாக்கியம் வேண்டி, ஹோமம், சந்தான பாக்கியம் வேண்டி, ஹோம பூஜையும், மதியம், 12 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருமணத்தடை: 3ம் தேதி காலை, 7.30 மணி முதல், 9 மணி வரை, ஆண், பெண் இருபாலருக்கும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், சுமங்கலிகளுக்கு சிறப்பு பூஜையும், மதியம், 1 மணிக்கு, திருமணத்தடை நீங்கி, விவாகம் நடக்கவும், மாங்கல்ய பாக்கியத்துடன் வாழவும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. மதியம், 2 மணிக்கு, பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, கோவில் ஸ்தானிகர் ஹரிஹர குருக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar