Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதிரை வாகனத்தில் எழுந்தருளி இலங்கை ... திருப்பூர் சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா திருப்பூர் சுடலை மகாராஜா கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓரிக்கையில் காஞ்சி சுவாமிகளிடம் வேத மாணவர்கள் ஆசி
எழுத்தின் அளவு:
ஓரிக்கையில் காஞ்சி சுவாமிகளிடம் வேத மாணவர்கள் ஆசி

பதிவு செய்த நாள்

09 செப்
2026
03:09

மதுரை: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துவரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீர்காழி பாடசாலை மாணவர்கள் ஆசி பெற்றனர்.


சீர்காழியில் பிறந்தவர் ஸ்ரீ ஞானசம்பந்தர். அவர் பிறந்த இல்லம் காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1996ல் புனரமைக்கப்பட்டது. வேத நெறி தழைத்து ஓங்கவும், சைவத்துறை விளங்கிடவும், வேதம், சிவாகமம், ஸமஸ்கிருதம், திருமுறை போன்றவை பயிற்றுவிக்க அந்த இல்லத்தில் 1999 முதல் பாடசாலை துவங்கி நடந்து வருகிறது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு திருக்கோயில் சார்ந்த பாடங்கள் ஆறு ஆண்டுகளுக்கு நடத்தப்படுகிறது. தேர்வுபெறும் ஆதிசைவ சிவாச்சார்ய மரபில் வந்த மாணவர்களுக்கு காஞ்சிபுரம் அருகே ஏனாத்துாரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலை மூலம் ‘சிவாகம சூடாமணி’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. சீர்காழி பாடசாலையில் பயிலும் 45 மாணவர்கள், தலைமை ஆசிரியர் திருவிடை மருதுார் சாம்பசிவ சிவாச்சாரியார், வேத ஆசிரியர்கள் மயிலாடுதுறை மகாலிங்க ஸ்ரவுதிகள், முழையூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பில்லுார் ஆனந்த் சிவம், சமஸ்கிருத ஆசிரியர் ஹரிஹர சிவாச்சாரியார், பாடசாலை மேலாளர் ராஜகோபால ஐயர், உள்ளிட்டோர் காஞ்சியை அடுத்த ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசனம் செய்தனர். பின்னர் பூஜை, பிக்ஷாவந்தனம் செய்தனர். ஆறு ஆண்டு பயிற்சி முடித்து தேர்வில் வெற்றி பெற்ற, 10 மாணவர்களுக்கு மஹாசுவாமிகள் சதாப்தி மணிமண்டபத்தில் சங்கராச்சார்ய சுவாமிகள் திருக்கரங்களால் சான்றிதழ் அளித்து ஆசீர் வதித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றில் இருந்து ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
 மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar