திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2026 05:09
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் மாரியம்மன் கோவில்,கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், குட்டூர்- அண்ணாமலையார் கோவில், நத்தம் அரண்மனை சந்தனகருப்பு சுவாமி கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.