Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார் சிற்பத்துடன் பாடல் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பிள்ளையார் சிற்பத்துடன் பாடல் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

13 செப்
2026
03:09

செஞ்சி; செஞ்சி அருகே கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேட்டவலத்தை சேர்ந்த ஆசிரியர் பாரதிராஜா, செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுதாகர் ஆகியோர் செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தில் சிவன் கோவில் அருகில் பாறை உள்ளது. இந்த பாறையில் இரண்டரை அடி உயரம், இரண்டு அடி அகலமும், நான்கு கரங்களுடன் பிள்ளையார் புடைப்பு சிற்பம் செதுக்கி உள்ளனர். இதன் இடது புறம் வெண்பா வடிவில் கல்வெட்டு ஒன்று உள்ளது.


கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கல்வெட்டில் மகத நாட்டு மன்னன் வாணகோவரையனின் கொடை சிறப்பு குறிப்பிட்ட ப்பட்டுள்ளது. இந்திரன் பெய்வித்த பெருமழையில் இருந்து ஆயர்பாடி மக்களையும், ஆநிரைகளையும் கோவர்த்தன மலையைத் தூக்கி பகவான் கண்ணன் காப்பாற்றியதையும், சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் தனது வேலால் கிரவுஞ்ச மலையைத் தகர்த்ததையும் குறிப்பிட்டு, அதுபோல் வாணகோவரையர் தன்னை நாடி வரும் பாணர்கள், புலவர்கள், இரவலர்களுக்கு வாரி வழங்குவதற்காக மலைபோல் செல்வங்களை குவித்து வைத்திருந்தார் என அவரது கொடைச் சிறப்பை குறிப்பிட்டுள்ளனர்.


மகதை மண்டலம் என்பது சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகவும், இதன் தலைநகராக ஆறகளூர் விளங்கியதாகவும் ஏற்கனவே உள்ள ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். மேலும், கல்வெட்டின் அருகில் உள்ள ஓடையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் 15க்கும் மேற்பட்ட கற்தேய்ப்புக் குழிகள் காணப்படுகின்றன. இக்குழிகள் பண்டைய மனிதர்கள் நீர்நிலைகளின் அருகில் கல் ஆயுதங்களை கூராக்கியதால் ஏற்பட்டவையாக இருக்கலாம். ஆய்வின்போது கல்லூரி மாணவர்கள் பிரகாஷ், ராஜகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை. வீட்டில் வைக்கும் விநாயகருக்கு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைக்கும் விநாயகருக்கு காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. ... மேலும்
 
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஆதி-வரஹ க்ஷேத்திரமாக போற்றப்படும் திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar