Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் முத்து மாரியம்மன் ... அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்மராயப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
திம்மராயப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

13 செப்
2026
03:09

மேட்டுப்பாளையம்; நூற்றாண்டுகள் கடந்து பழமையும் பெருமையும் வாய்ந்த  திம்மராயப் பெருமாள் திருக்கோவில் ஜீரணோதரன் புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள இரும்பொறை பட்டக்காரன் பாளையம் திம்மராயப் பெருமாள் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. திருக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மற்றும்  ராஜகோபுரம் பணிகள் நிறைவடைந்து வரும் 17ஆம் தேதி வியாழக்கிழமை மகா கும்பாஅபிஷேகம் நடைபெறுகிறது. இத்திருக்கோவிலில் புதிதாக அழகிய ஆலய நுழைவாயில் மூலவர் கோபுரம் ஜெயன் விஜயன் கருட கம்பம் மணி மண்டபம் விநாயகர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் ஆகிய இத்திருபணியில் அடங்கும்.மகா கும்பாபிஷேகத்திற்காக அரண்மனை வடிவில் யாகசாலையும் இதில் 9 ஹோம குண்டங்கள், மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 


இந்த வேதி கைகளில் ராஜகோபுரம், ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராயப் பெருமாள், கருடாழ்வார் ஆஞ்சநேயர் சங்கு சக்கரம் உள்ளிட்ட அழகிய வண்ண வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை புண்ணிய வாசனம் எஜமான சங்கல்பத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை  முதல் மங்கல இசை மிருத் சங்கிரஹணம், வேத திவ்ய பிரபந்த துவக்கத்துடன் மாலையில் விமான கலசம் இரும்பொறை கைலாசநாதர் திருக்கோவிலில் இருந்து ஊர் வளமாக எடுத்து வரப்பட்டு திருக்கோவிலை அடைகிறது. பின்னர் எந்திர ஸ்தாபனம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தொடர்ந்து 17-ஆம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு மேல் மூலவர் விமானம் தோரண வாயில் ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக குழுவினர் அறங்காவலர்கள் மற்றும் விழா குழு வினர் பட்டக்காரன்பாளையம் இரும்பறை ஏற்பாடு செய்கின்றனர்  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை காலை, ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை; சிறுமுகை அடுத்துள்ள பட்டகாரம் பாளையம் நூற்றாண்டுகள் கடந்து பழமையும் பெருமையும் வாய்ந்த ... மேலும்
 
temple news
நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar