Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருளில் பள்ளியறை பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
12:02

சிவகாசி: மின்தடையால், சிவகாசி சிவன் கோயிலில் ஜெனரேட்டர் இயக்கததால், இருளில் நடக்கும் பள்ளியறை பூஜையில், பக்தர்கள் அவதியடைகின்றனர். சிவகாசியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசாமி, விசாலட்சியம்மன் சிவன் கோயில் உள்ளது. இங்கு தினமும்அதிகாலை முதல் இரவு வரை நடக்கும் பூஜைகளில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். கோயிலில் இரவு 8 மணி முதல் 9 வரை மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை நேரத்தில் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு 8.40 மணிக்கு பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். இப் பூஜையில் பங்கேற்க பக்தர்கள் திரளாக வருகின்றனர்.  தினமும் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது, விஸ்வநாதசாமி ,கருவறையில் இருந்து புறப்பட்டு பல்லக்கில் வீற்றிருக்க, சிவப்பு கம்பள விரிப்பில், வெண்சாமர வீசுதலுடன் சங்கு, மேளம் முழங்க, பக்தர்கள் பாடலுடன் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பள்ளியறைக்கு செல்வார். இந் நடைமுறையின் போது, கோயிலில் மின்சாரம் தடைபடுவதால், இருள் சூழ்ந்த நிலையில் சுவாமி வலம் வருகிறார். இருளால் பக்தர்கள் இடறி விழுகின்றனர். அதிகாலையில் நடக்கும் திருப்பள்ளி எழுச்சி பூஜை கூட , சில நாட்களில் இருளில் நடக்கிறது.  கோயில் நிர்வாகத்தில் ஜெனரேட்டர் வசதி உள்ளது. மின்சாரம் தடைபடும் போது ஜெனரேட்டர் இயக்குவது இல்லை. பக்தர்கள் விபரம் கேட்டால், டீசல் வாங்கி கொடுங்கள் என்கின்றனர். சுவாமி, அம்பாள் கருவறையில் மட்டும், யு.பி.எஸ்., வசதி உள்ளது .அந்த வெளிச்சத்தில் சுவாமி கும்பிடுங்கள், என்கின்றனர்.  ,மின்தடையின் போது ஜெனரேட்டர் இயக்கி ,பக்தர்கள் மனம் நோகாதபடி, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar