பதிவு செய்த நாள்
20
பிப்
2013
10:02
சென்னிமலை: சென்னிமலை மலை மீது உள்ள முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் 23.46 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி, தங்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.சென்னிமலையில் மலை மீது முருகப்பெருமான், சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானை உடன் தனி கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார். இங்கு பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவர்கள் காணிக்கைகளை உண்டிலில் செலுத்த வசதியாக, தேவஸ்தானம் சார்பில், உண்டியல் வைக்கப்பட்டுள்து. சென்னிமலை மலை மீது திருப்பணி உண்டியல், அன்னதான உண்டியல், காணிக்கை உண்டியல் என தனி தனியாக உள்ளது. 112 நாட்களுக்குப்பின், இந்த உண்டியல் திறப்பு நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்ட உதவி ஆணையாளர் ஆனந்த், ஈரோடு மாவட்ட உதவி ஆணையாளர் வில்வமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், தலைமை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம், புலவர் அறிவு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் முறைப்படி திறக்கப்பட்டது.பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பிரித்து எண்ணப்பட்டது. உண்டியலில், 79 கிராம் தங்கம், 321 கிராம் வெள்ளி, ரொக்கம், 23 லட்சத்து, 46 ஆயிரத்து, 52 ரூபாய் இருந்தது. சென்னிமலை பகுதியில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், பக்தர்கள், உண்டியல் தொகையை எண்ணினர்.