Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி பிரம்மோற்சவம்: சூரியபிரபை ... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவில் உண்டியல் திறப்பு: ரூ.23 லட்சம் வருவாய்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 பிப்
2013
10:02

சென்னிமலை: சென்னிமலை மலை மீது உள்ள முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் 23.46 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி, தங்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.சென்னிமலையில் மலை மீது முருகப்பெருமான், சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானை உடன் தனி கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார். இங்கு பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவர்கள் காணிக்கைகளை உண்டிலில் செலுத்த வசதியாக, தேவஸ்தானம் சார்பில், உண்டியல் வைக்கப்பட்டுள்து. சென்னிமலை மலை மீது திருப்பணி உண்டியல், அன்னதான உண்டியல், காணிக்கை உண்டியல் என தனி தனியாக உள்ளது. 112 நாட்களுக்குப்பின், இந்த உண்டியல் திறப்பு நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்ட உதவி ஆணையாளர் ஆனந்த், ஈரோடு மாவட்ட உதவி ஆணையாளர் வில்வமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், தலைமை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம், புலவர் அறிவு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் முறைப்படி திறக்கப்பட்டது.பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பிரித்து எண்ணப்பட்டது. உண்டியலில், 79 கிராம் தங்கம், 321 கிராம் வெள்ளி, ரொக்கம், 23 லட்சத்து, 46 ஆயிரத்து, 52 ரூபாய் இருந்தது. சென்னிமலை பகுதியில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், பக்தர்கள், உண்டியல் தொகையை எண்ணினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar