திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2013 10:02
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடவருவாயில் தீபாராதனை இன்று நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசித்திருவிழாவும் ஒன்றாகும். இவ்வாண்டு மாசித்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (20ம்) 5ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.22ம் தேதி 7ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5.00- 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருவ சட்டசேவை நிக ழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 8.45 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்து மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 23ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும், காலை 10.30 - 11.30 மணிக்குள் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதிஉலா வந்து கோவில் வந்து சேர்கிறார். வரும் 24ம் தேதியன்று 9ம் திருவிழாவை முன்னிட்டு சுவ õமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் மீன லக்னத்தில் தேரோட்டம் துவங்குகிறது. வரும் 26ம் தேதி 11ம் விழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா உட்பட கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.