காரமடை அரங்கநாத கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2013 11:02
ஆயிரக்கணக்கான தாசர்களின் "ரங்கா பராக்... கோவிந்தா பராக்... கோஷத்துடன், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழாவுக்கானகொடி, ஏற்றப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ரங்கநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.