காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா, மே14ல் துவங்கியது. அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முக்கிய விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, காலை 7.45 மணிக்கு திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமேஸ்வரி செய்திருந்தனர். டி.எஸ்.பி.,மங்களேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.