திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. கடந்த மே 15ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. மே19 ம் தேதியன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, நடராசப்பெருமான் திருவீதி உலாவும் இரவு கேடகங்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடைபெறும். நாளை காலை 6 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்கள் மூன்று திருத்தேர்களில் எழுந்தருளலும், மாலை 3.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். மே 24ல் 10ம் திருநாளை முன்னிட்டு சீதளி தெப்பக்குள மண்டபத்தில் சுவாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுல் நடைபெறும்.