Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றோர்களின் பாவபுண்ணியம் ... அறு சுவை உணவு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீயா வேலை செய்யனும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
05:06

*பக்தனின் தூய உள்ளமே கடவுளின் அரியாசனம்என்று குறிப்பிடுவார் ராமகிருஷ்ணர். நம் உள்ளம் வெண்மையான ஸ்படிகம் போல தெளிவடையும் போது தான் கடவுள் அங்குகுடியேறுவார்.
*கிடைப்பதற்கு அரிய இளமைக்காலம் வாழ்வில் மீண்டும் வருவதில்லை. மன உறுதியுடன் செயலில் ஈடுபடுங்கள். முன்னேற்றப்பாதையில் வெற்றி நடை போடுங்கள்.
*சாதனை புரிய இதுவே நல்ல தருணம்! உடல் வலிமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனதில் நல்லெண்ணம் மட்டும் நுழையஅனுமதி அளியுங்கள்.
*மனித வாழ்வின் குறிக்கோள் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளுதலாகும். எல்லா வெற்றிகளுக்கும் கடவுளுடைய திருவடியில்   பக்தியோடு நம்பிக்கை செலுத்துங்கள்.
*என் உடல், உள்ளம், உடைமை அனைத்தும் உன்னுடையதே! உனது விருப்பப்படி என்னை வழிநடத்து! என்று கடவுளிடம் அன்றாடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
*உங்களின் துன்பத்தையும், தடைகளையும்     கடவுள் அகற்றி நல்வழிப்  படுத்துவார். உங்கள் வாழ்வு உயர்வதற்கு கடவுளின் அருள் எப்போதும் துணைநிற்கும்.
*கடமையைப் புறக்   கணித்து விட்டு ஆடம்பரத்திலும், சொகுசு வாழ்விலும் ஈடுபடுவது மனித மனத்தின் இயல்பு. ஆனால், இதனைத் தியானப்பயற்சி சீர்படுத்தி விடும். அதனால், தினமும் தியானத்தில் ஈடுபடுங்கள்.
*மனதை நல்வழிப்படுத்துவது அவசியம். முறையாகப் போராடி அதைப் பக்குவப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். வாழ்வில் ஒழுங்கும், உறுதியும் இல்லாவிட்டால் முன்னேற்றத்தைப் பெற முடியாது.
*தீவிரமாகப் பாடுபடுங்கள். தீ போல் வேலை செய்யுங்கள். எப்போதும் உஷாராக இருங்கள். ஒரு கணப்பொழுதையும் வீணாக்காதீர்கள். ஒவ்வொரு   நாளும் முடிந்ததும் மாலைவேளையில் ராமகிருஷ்ணர், அம்மா! இந்த நாளும் போய்விட்டதே! இன்னும் உன் தரிசனம் கிடைக்கவில்லையே! என்று பிரார்த்திப்பது வழக்கம்.
*கோயில்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல நூல்களைப் படியுங்கள்.
*ஒழுக்கம் தவறாமல் வாழுங்கள். உண்மையைப் பேசுங்கள். பெண்களைத் தாயாக மதித்துப் போற்றுங்கள். இவற்றை பின்பற்றி வந்தால் வாழ்வில் பிரகாசம் தென்படத் தொடங்கும்.
*எந்த யோசனையும் வேண்டாம். இனியும் சோம்பி இருப்பது கூடாது. இன்றைக்கே இப்போதைக்கே நற் செயல்களில் ஈடுபடுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். மற்றவற்றை  கடவுள் பார்த்துக் கொள்வார்.
*இறைவன் இருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் இல்லை என்று விரக்தி எண்ணத்தை ஒருபோதும் எண்ணுவது கூடாது.
*எப்போதும் நல்லதை மட்டும் காணப்   பழகுங்கள். நற்குணமே ஒருவரிடம் இல்லாவிட்டாலும் அவரையும் புறக்கணித்து ஒதுக்காதீர்கள்.
*உங்களின் ஒவ்வொரு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நன்மையே வெளிப்படட்டும். உங்களுக்கும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அமைதியும், நன்மையும் எப்போதும் உண்டாகட்டும்.
பிரம்மானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar