Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இது ராஜா மரியாதை! புண்ணியமான உச்சிவேளை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயிருக்கு நிகரிந்த நாடல்லவோ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
12:07

*உலகம் வேண்டுவது ஒழுக்கம் மட்டுமே. உள்ளுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியே புலப்படுத்துங்கள். கொழுந்து விட்டெரியும் அன்பு உள்ளத்தோடு தன்னமில்லாமல் பிறருக்கு தொண்டாற்றுங்கள்.
*உலகம் முழுதும் எதிர்த்து நின்றாலும், மனதிற்குச் சரியென பட்டதைச் செய்யும் துணிவு வேண்டும். எடுத்துக் கொண்ட குறிக்கோளை விடாமல் பின்தொடர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.
*உடலிலும் மனதிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் விளையாது. அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல்ஊக்கமுடன் செய்யும்வீரமுயற்சியே மேல்நோக்கி செலுத்தும்.
*யாருடைய மனம் ஏழை எளியவர்க்கு துயரத்தில் ஆழ்ந்து விடுமோ, அவரே மகாத்மா.
*எல்லா உயிர்களும் இறைவன் வாழும் கோயில் என்றாலும் மனிதனே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதைவழிபட இயலாதவன் வேறு கோயிலுக்கு செல்வதால்பயனில்லை.
*உண்மையை பேசுங்கள். எத்தனை தவறான தூண்டுதல் குறுக்கிட்டாலும் உண்மைக்கே பணிவிடை செய்யுங்கள்.அதனால், தெய்வீக வலிமை பெறுவீர்கள்.
*பணியை ஒழுங்காகவும், அமைதியுடனும் செய்யப் பழகுங்கள். வெறும் புகழ் வேண்டியும், பகட்டுவாழ்வுக்காகவும் செய்வது கூடாது.
*ஒன்றாகக் கூடி வாழ்வதே வலிமை. பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வின் நோக்கம். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் தகுதி தானாகவே கிடைக்கும்.
*பூமி அன்னையைப் போல பொறுமையைக் கடைபிடிக்கத் தயாரானால், உலகமே உங்கள் காலடியில் கிடக்கும்.
*நம்பிக்கை, நேர்மை, பக்தி உள்ளத்தில் இருக்குமானால், எல்லாவகையிலும் முன்னேற்றமே. பகைவனிடம் கூட அன்பு காட்டத் தவறாதீர்கள். யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.
*பிறருக்காகச் செய்யும்சிறுமுயற்சி கூட பெரும் சக்தியை உண்டாக்கும். பிறருக்கு மனதால் நன்மையை நினைத்தால் கூட சிங்கத்தின் பலம் நமக்கு வரும்.
*உறங்குவதற்கான காலகட்டம் இதுவல்ல. அனைவரும் பாடுபடத் தயாராவோம். வெற்றியைப் பறிக்க களத்தில் இறங்குவோம். எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே அமையும்.
*பிறர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், அவரது குற்றங்களைப் பற்றி ஒருபோதும் பேசுவது கூடாது. குறை கூறுவதால் அவருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கேடு உண்டாக்கிக் கொள்கிறோம்.
*உலகத்திலே எப்போதும் கொடுப்பவராகவே இருங்கள். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்த்து காத்து நிற்காதீர்கள். இறைவனைப் போல நாமும் ஈகைகுணத்தோடு இருப்போம்.
*காற்றுள்ள போதேதூற்றிக்கொள் என்பார்கள். சோம்பல் நமக்கு சிறிதும்உதவாது. ஆர்வத்துடன் தொழில்களத்தில் இறங்குங்கள்.
*உயிருக்கு நிகரான இந்த தேசம் வீரர்களுக்கு மட்டுமே உரியது. வெற்றியோ, தோல்வியோ விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்வியைக் கண்டுதுவளாதீர்கள்.
*எப்போதும் முகத்தில் மலர்ச்சியும், இதழில் புன்னகையும் இருப்பவன் கடவுளின் அருகில் செல்லும் தகுதியைப் பெறுகிறான்.
-விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar