மதுரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில். இவரது ஆலயத்தின் தென்மேற்கு மூலையில், தனிச் சன்னதியில் அருள்கிறார் மழைப்பெருமாள். வறட்சி காலங்களில், இவரை மனதார வழிபட, நன்கு மழை பெய்து வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.