Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவித்ர உற்சவம் கொண்டாட்டம் கோயில்களில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2013
11:09

கந்தர்வக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா கோலகலமாக நடந்தது.கந்தர்வக்கோட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த, நான்கு வாரங்களுக்கு முன் கணபதி பூஜை, காப்புக்கட்டுதலுடன் விமர்சையாக துவங்கியது. தொடர்ந்து, நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதில் முக்கிய விழாவான முத்துப்பல்லக்கு ஊர்வலத்தையொட்டி, அதிகாலை, 3 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர். கந்தர்வக்கோட்டை வங்கார ஓடை குளத்தில் குளித்து, உடலில் கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி, தாரை தப்பட்டை முழங்க, கையில் வேப்பிலையுடன் ஊர்வலமாக, மூன்று முறை கோவிலை வலம் வந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன்மூலம் அம்மை நோய் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தொடர்ந்து பால்காவடி, பிள்ளை தொட்டி காவடி, பறவை காவடி என, பலவகை காவடிகளை பக்தர்கள் எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முத்துப்பல்லக்கில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம், கந்தர்வக்கோட்டையில் ராஜவீதிகளில் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஊர்வலத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாட்டை ஊர் துமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar