Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மோகனூர் பெருமாள் கோவிலில் அக்.,20ல் ... கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
11:09

சேலம்: சேலம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. சேலம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத் தேர்த் திருவிழாவை, ஜெயராக்கினி நகர் பங்கு தந்தை சவரி, திருப்பலி செய்து, கொடி யேற்றி துவக்கி வைத்தார். இன்று மாலை, ஆவுடையார் கோவில் பங்கு தந்தை இருதயராஜ், செபமாலை நவநாள் திருப்பலி நடத்துகிறார். நாளை மாலை, தர்மபுரி, கார்மேல் தியான ஆஸ்ரம இயக்குனர் ஸ்டீபன், செபமாலை நவநாள் திருப்பலி நடத்துகிறார். செப்டம்பர், 25ம்தேதி மாலை, கோவை, வெள்ளகோவில், பங்குதந்தை கிளாடியஸ் செபமாலை நவநாள் திருப்பலி நடத்துகிறார். செப்டம்பர், 26ம் தேதி மாலை, கோவை வடவள்ளி பல்கு தந்தை செல்வராஜ் திருப்பலி நடத்துகிறார். 27ம் தேதி மாலை, திருச்செங்கோடு புனித அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மாணிக்கம், செபமாலை நவநாள் திருப்பலி நடத்துகிறார். 28ம் தேதி மாலை, பெங்களூரு தூய பேதுரு பாப்பிறை குருத்துவக் கல்லூரியின் இம்மானுவேல், செபமாலை நவநாள் திருப்பலி நடத்துகிறார். சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் உதவி இயக்குனர் விமல்தாஸ், கலந்து கொண்டு மறையுரை நிகழ்த்துகிறார். செப்டம்பர், 29ம் தேதி காலை, சேலம் ஆயர் சிங்கராயன் கலந்து கொண்டு ஆதிதூதர் புனித மிக்கேல் திருவிழா, கூட்டு பாடற்பலி நடத்துகிறார். அன்று மாலை, தேர் மந்திரிப்பு, புனித மிக்கேலின் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சியில், குழந்தை இயேசு பேராலயத்தின் பங்கு தந்தை கிரகோரி ராஜன் கலந்து கொள்கிறார். செப்டம்ப, 30ம் தேதி காலை, நன்றித் திருப்பலி, கொடி இறக்கம் ஆகியன நடக்கிறது. இந்த தேர்த்திருவிழாவில், சகாய மாதா அன்பியம், செபமாலை மாதா அன்பியம், இம்மானுவேல் அன்பியம், பீடச் சிறுவர்கள், ஆரோக்கியமாதா அன்பியம், பாத்திமா மாதா அன்பியம், டிவைன் மெர்சி அன்பியம், ஹோலி ஏஞ்சல்ஸ் கன்னியர்கள், புனித அந்தோணியாளர் அன்பியம், புனித பால் அன்பியம், தமத்திருத்துவ அன்பியம், ஹென்றி இல்லக் கன்னியர்கள், புனித அந்தோணியாளர் அன்பியம், புனித மிக்கேல் அன்பியம், குழந்தை தெரசா அன்பியம், அன்னை தெரசா கன்னியர்கள், அன்னை தெரசா அன்பியம், கிறிஸ்து அரசர் அன்பியம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மரியாயின் சேனை அமைப்பின் பெண்கள், புனித அல்போன்சம்மாள் அன்பியம், திருக்குடும்ப அன்பியம், புனித வின்சென்ட் தே பவுல் சபை, லூர்து மாதா அன்பியம், புனித சூசையப்பர் அன்பியம், மரியாயின் சேனை அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar