Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ராம நவமி; ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை
எழுத்தின் அளவு:
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை

பதிவு செய்த நாள்

28 மார்
2026
07:03

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக கல்கருட சேவை வெகு விமர்சையாக நடந்தது.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் 40 தலங்களில், 14வது திவ்ய தேசமாகவும், வஞ்சுவள்ளி தயார் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில், மூலவராகவும் உற்ஸவராகவும் விளங்கும் கல்கருட பகவான்,தை மாதத்தில் நடைபெறும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போதும், பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழாவின் போதும், கல்கருட சேவைாக வெளி வருவது சிறப்பு. இந்தாண்டு பங்குனி திருத்தேர் திருவிழா கடந்த மார்ச் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நான்காம் நாளான நேற்று கல்கருட சேவை நடைபெற்றது. அப்போது, கருட பகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து முதலில் நான்கு பேர், அடுத்து எட்டு பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானின் எடைக்கு ஏற்ப பக்தர்கள், கருடபகவானை சுமந்து வாகன மண்டபத்தில் எழுந்தருளும் காட்சியை ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும் உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் ஏப்.1ம் தேதி திருத்தேராட்டமும், மதியம் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar