கடவுளையோ, மனதிற்குப் பிடித்த தலைவனையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். குழந்தை பிறந்தது முதல் சிறுவனாகும் வரை பத்து பருவங்களாகப் பிரிப்பர். பருவத்திற்கு பத்து பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் பிள்ளைத்தமிழில் இடம்பெறும். பிள்ளைத்தமிழை ஆண்பாற்பிள்ளைத் தமிழ்,பெண்பாற்பிள்ளைத்தமிழ் என்று இரண்டாகப் பிரிப்பர்.