வடமதுரை: வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வளாக, ஐயப்ப மணி மண்டபத்தில், 43ம் ஆண்டு சபரி யாத்திரை விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. 36 சிவ வைணவ கோயில்களில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து, வடமதுரை பால்கேணி மேட்டில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டது. மணி மண்டபத்தில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி கணபதி ஹோமம், 108 சங்கு, 108 கலச அபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை நிர்வாகிகள் காமராஜ், ராமதாஸ், நந்தகுமார், பிரபு உள்பட ஐயப்ப பக்தர்கள் சேவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.