Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ... தூய பேதுரூ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் ஜெயந்தி ரத யாத்திரை ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
11:12

திருவள்ளூர்: விவேகானந்தர், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ரத யாத்திரை, திருவள்ளூரில் துவங்கியது. சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரத யாத்திரை, கடந்த, ஏப்ரல் மாதம் துவங்கி, 28 மாவட்டங்களில் வலம் வந்தது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், ரதயாத்திரை வலம் வரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. திருவள்ளூர் நகராட்சியில் துவங்கிய யாத்திரையை, வருவாய் துறை அமைச்சர் ரமணா துவக்கி வைத்தார். இதில், ஆட்சியர் வீர ராகவ ராவ், நகராட்சி தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் மற்றும் மாவட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

திருத்தணி: சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரத யாத்திரை, நேற்று முன்தினம் இரவு, திருத்தணி கமலா தியேட்டர் அருகே வந்தடைந்தது. ரத யாத்திரையை, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். மேலும், தனியார் தொண்டு நிறுவன மகளிர் அமைப்பை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், கையில் விளக்குடன் காத்திருந்து மலர் துாவி வரவேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை, திருத்தணி முக்கிய வீதிகளில், ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. இன்று, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியத்தில் ரத யாத்திரை ஊர்வலம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar