ஆலங்குடி: ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் மார்கழி திங்கள் பாவை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.