Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிமலைக்கோயிலில் தங்கிய பர்வதராஜகுல மகா ஜன மக்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
11:01

பழநி: எடப்பாடி, பர்வதராஜகுல மகா ஜனங்கள் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காவடிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன், பழநி வந்தடைந்தனர். நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர். பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜன., 14 ல் புறப்பட்டு, பழையபேட்டை, வெள்ளாண்டிவலசை, புதுப்பேட்டை, சின்னமணலி, இடைப்பாடி, க.புதூர் போன்ற ஊர்காவடிகள் ஒன்றிணைந்து, நகர் ஊர் வலமாக, பழநிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். ஜன.,21ல் அமராவதி ஆற்றில் நீராடி, மானூர் ஆற்றில் காவடிகளுடன் நேற்று மகாபூஜை செய்து பின் பழநியை வந்தடைந்தனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில், பல வண்ணப்பூக்களால், "ஓம் சரவணபவ வடிவில் ரங்கோலி வரைந்திருந்தனர். மாலையில் காவடிகள் முத்திரை செலுத்தி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து, எடப்பாடி பருவதராஜகுல மகாஜன, பழநியாண்டவர் காவடி கமிட்டியினர் சார்பில், உச்சிகால அன்னதானம் வழங்கப்பட்டது. இராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்து, நேற்றிரவு மலைக்கோயிலில் தங்கினர். காவடி கமிட்டியினர் கூறியதாவது: எங்கள் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் இளநீர், சர்க்கரை, பால் காவடிகள் எடுத்து வந்துள்ளோம். இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்கிறோம். ஏற்கனவே தயார் செய்துள்ள 10 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வழங்கி, எங்கள் மடத்தில் தங்கி கணக்குகள் சரிபார்த்து விட்டு, ஊருக்கு புறப்படுவோம். 355 ஆண்டுகளாக, பலநூறு குடும்பங்கள் இணைந்து வழிபாடு நடத்துகிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar