கேரளா பாரதப்புழா கும்பமேளா, அமிர்த ஸ்நானத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2026 10:02
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, அமிர்த ஸ்நானத்துடன் நேற்று நிறைவடைந்து.
கேரள மாநிலம், திரூர் அருகே உள்ளது திருநாவாயா நாவா முகுந்தர் கோவில். இங்கு கடந்த, 1766ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட மஹாமக கும்பமேளா கடந்த ஜன. 19ம் தேதி துவங்கியது. சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், புனித நீராடல், நிளா ஆரத்தி என பல்வேறு நிகழ்வுகளுடன் நடந்து வந்த கும்பமேளா நேற்று அமிர்த ஸ்நானத்துடன் நிறைவடந்தது. இதில் நூற்றுக்கணக்கான நாக சன்னியாசிகள், பல்வேறு பீடங்களை சேர்ந்த துறவியரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து துறவியரை கவுரவிக்கும் யதி பூஜை நடைபெற்றது. துறவியலின் பாதங்களை பூஜித்து, அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பமேளாவின் மிக முக்கிய நிகழ்வான சனாதன தர்மத்தின் சமத்துவ கொள்கையை பறைசாற்றும் ஜாதி, மதம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உணவருந்தும் வைபவம் நடைபெற்றது. மாலையில் நடந்த நிள ஆரத்தியுடன் இந்த மஹாமக கும்பமேளா நிறைவேற்றது. கும்பமேளா அமைப்பினர் கூறியதாவது: வேதமந்திர முழக்கங்கள் முழங்க கும்பமேளா நேற்று நிறைவடைந்தது. விழாவின் இறுதி நிகழ்வாக நிளா நதிக்கு மகா ஆராத்தி எடுக்கப்பட்டது. 2028லும் இதுபோன்று மஹாமகம் கும்பமேளா கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என்றனர்.